உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொழிலாளியை தாக்கிய இரண்டு பேருக்கு வலை

தொழிலாளியை தாக்கிய இரண்டு பேருக்கு வலை

புதுச்சேரி: மது போதையில் தொழிலாளியை தாக்கிய, இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.வானுார் அடுத்த பொம்மையார்பாளையத்தை சேர்ந்தவர் முத்துகுமரன், 41; தச்சு தொழிலாளி. இவரும், அதே பகுதியை சேர்ந்த சிவராமன், வேல்குமரன் ஆகியோர் பிள்ளைச்சாவடி தனியார் மதுபாரில், கடந்த 17ம் தேதி மது குடித்தனர்.அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த, சிவராமன், வேல்முருகன், இருவரும் சேர்ந்து, முத்துகுமரனை தாக்கினர். அவர் கொடுத்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து, இருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி