உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  தேசிய சப் - ஜூனியர் கபடி; பைனலில் தமிழகம் தோல்வி

 தேசிய சப் - ஜூனியர் கபடி; பைனலில் தமிழகம் தோல்வி

சென்னை: ஹரியானா மாநிலம் அமெச்சூர் கபடி சங்கம் சார்பில், 39-வது தேசிய சப் - -ஜூனியர் மகளிர் கபடி போட்டி, அம்மாநிலத்தில் உள்ள கோஹானாவில் நடந்தது. இதில் 30 அணிகள் பங்கேற்றன. இத்தொடரில் துவக்கம் முதலே, அசத்தலான ஆட்டத்தை வெளிப் படுத்திய தமிழக மகளிர் அணி, அரையிறுதியில் ராஜஸ்தான் அணியை 38 - -36 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. இறுதிப்போட்டியில் தமிழக அணி, வலிமை வாய்ந்த ஹரியானா அணியை எதிர்த்து மோதியது. விறுவிறுப்பான ஆட்டத்தில், தமிழக அணி 42 - -32 என்ற புள்ளிக்கணக்கில், அதிர்ச்சி தோல்வியடைந்து, இரண்டாம் இடத்தை பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை