கொலை முயற்சி வழக்கில் ஒருவர் கைது
பெரம்பூர்: கத்தியால் வெட்டிய நபரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். பெரம்பூர் அகரம் பகுதியை சேர்ந்தவர் ஆசிக் பாஷா, 43. வீட்டருகே வசிக்கும், 42 வயது பெண்ணின் வீட்டை அடிக்கடி எட்டி பார்த்ததால், இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டு, ஆசிக் பாஷாவை கத்தியால் தாக்கியுள்ளனர். இதில், ஆசிக்குக்கு, 3 இடத்தில் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக, பெரம்பூர் காவல் நிலையத்தில் ஆசிக் பாஷா அளித்த புகாரின்படி, செம்பியம் போலீசார் வழக்குப்பதிந்து, நசீர்பாஷா, 42, என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.