சூரசம்ஹார திருவிழா: நாளை காப்பு கட்டுதல்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரத்திருவிழா நாளை காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரத்திருவிழாவில் இன்று மாலை, 5:30 மணிக்கு, அனுக்ஞை, வாஸ்துசாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது. நாளை (22ம் தேதி) காலை, 10:00 மணிக்கு கந்தசஷ்டி உற்வசம் காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. நாளை முதல் வரும், 28ம் தேதி வரை காலை, 10:00 மணிக்கு நான்கு கால அபிேஷக ஆராதனைகள் நடக்கின்றன.வரும், 26ம் தேதி வேல்வாங்கும் உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது. 27ம் தேதி மாலை, 4:30 மணிக்கு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் சூரசம்ஹாரம் நடக்கிறது. வரும், 28ம் தேதி காலை, 7:00 மணிக்கு மஹா அபிேஷகம், மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்வசம் நடக்கிறது. 29ம் தேதி மாலை, 6:00 மணிக்கு திருஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.