உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தக்காளி வரத்து அதிகரிப்பு: விலை உயராததால் ஏமாற்றம்

தக்காளி வரத்து அதிகரிப்பு: விலை உயராததால் ஏமாற்றம்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரித்த போதும், விலை உயராததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், தக்காளி (15 கிலோ பெட்டி) --- 260, தேங்காய் (ஒன்று) - 35, கத்தரிக்காய் கிலோ - 31, முருங்கைக்காய் --- 60, வெண்டைக்காய் --- 15, முள்ளங்கி --- 28, பூசணிக்காய் --- 15, அரசாணிக்காய் --- 20, பாகற்காய் --- 35, புடலை - 25, சுரைக்காய் --- 20, பீர்க்கங்காய் --- 25, பீட்ரூட் --- 15, வெள்ளரிக்காய் --- 10, அவரைக்காய் --- 25 மற்றும் பச்சை மிளகாய் --- 60 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை காட்டிலும், தக்காளி (15 கிலோ பெட்டி) -- 60, கத்தரிக்காய் கிலோ - 12, பச்சை மிளகாய் --- 10 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. வெண்டைக்காய் --- 20, அரசாணிக்காய் - -- 3, பாகற்காய் --- 7, பீர்க்கங்காய் --- 15, சுரைக்காய் மற்றும் பீட்ரூட் --- 5, புடலை, வெள்ளரிக்காய் மற்றும் அவரைக்காய் -- 10 ரூபாய் விலை குறைந்துள்ளது. வியாபாரிகள் கூறுகையில், 'காய்கறி மார்க்கெட்டிற்கு வழக்கத்தை விட தக்காளி வரத்து, ஆயிரம் பெட்டிகள் வரை கூடுதல் இருந்தது. ஆனால், விவசாயிகள் எதிர்பார்த்த விலை கிடைக்காததால் ஏமாற்றமடைந்தனர்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ