உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  காய்கறிகள் வரத்து குறைவு; வெறிச்சோடியது மார்க்கெட்

 காய்கறிகள் வரத்து குறைவு; வெறிச்சோடியது மார்க்கெட்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று வரத்து குறைந்ததால், வெறிச்சோடி காணப்பட்டது. கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில், விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்கின்றனர். உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் இங்கு வருகின்றனர். இந்நிலையில், நேற்று மார்க்கெட்டில், காய்கறிகள் வரத்து குறைவாக இருந்ததால் வெறிச்சோடி காணப்பட்டது. நேற்று தக்காளி (15 கிலோ பெட்டி) --- 700, தேங்காய் (ஒன்று) --- 40, கத்தரிக்காய் கிலோ - 35, வெண்டைக்காய் -- 65, முள்ளங்கி - 20, பூசணிக்காய் --- 15, அரசாணிக்காய் --- 12, பாகற்காய் --- 27, புடலை --- 20, சுரைக்காய் --- 20, பீர்க்கங்காய் --- 50, பீட்ரூட் --- 30, வெள்ளரிக்காய் --- 20, அவரைக்காய் --- 70, பச்சை மிளகாய் --- 45 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை காட்டிலும், தக்காளி (15 கிலோ) --- 250, தேங்காய் (ஒன்று) --- 5, கத்தரிக்காய் கிலோ -- 13, முள்ளங்கி -- 3, புடலை -- 15, பீட்ரூட் - 20 ரூபாய் விலை குறைந்துள்ளது. பூசணிக்காய் மற்றும் அரசாணிக்காய் -- 5, பாகற்காய் -- 7, அவரைக்காய் --- 10 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. வியாபாரிகள் கூறுகையில், 'மார்க்கெட்டிற்கு, நேற்று பெரும்பாலான காய்கறிகள் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. இதனால், காலை 11:30 மணியளவில் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி