பைக் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே மோதிராபுரத்தைச் சேர்ந்தவர் தனசேகரன், 23. இவர், தனது தாயாரை பார்ப்பதற்காக, ஆத்துப்பொள்ளாச்சி சென்று விட்டு, மீண்டும் தனது பல்சர் பைக்கில், பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அம்பராம்பாளையம் தர்கா அருகே எதிரே வந்த அரசு டவுன் பஸ், கட்டுப்பாட்டை இழந்து, பைக் மீது மோதியது. இதில் தனசேகரன், பலத்த காயமடைந்தார். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். ஆனைமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.