உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொலை மிரட்டல் ஒருவர் மீது வழக்கு

கொலை மிரட்டல் ஒருவர் மீது வழக்கு

புவனகிரி, : புவனகிரியில் முன்விரோதத்தில் ஒருவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.புவனகிரி அடுத்த தம்பிக்குநல்லாம்பட்டினத்தை சேர்ந்தவர் பாண்டியராஜன். மேல் புவனகிரியை சேர்ந்தவர் இளையராஜா. இருவருக்கும் முன் விரோதம் உள்ளது. கடந்த 13ம் தேதி அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் பாண்டியராஜன் நின்றிருந்தார். அங்கு வந்த இளையராஜாவுக்கும், அவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த இளையராஜா, பாண்டியராஜனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின் பேரில், இளையராஜா மீது புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை