உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பெண் வழக்கறிஞருக்கு காதல் தொல்லை 

 பெண் வழக்கறிஞருக்கு காதல் தொல்லை 

கடலுார்: கடலுாரில் பெண் வழக்கறிஞருக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலுாரைச் சேர்ந்த 26 வயது பெண் வழக்கறிஞர். இவர், கடலுார் அடுத்த வெள்ளப்பாக்கத்தை சேர்ந்த ஜெய்பீம்தாசன், 30; என்பவர், தனக்கு அடிக்கடி காதல் தொல்லை கொடுப்பதாகவும், இதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கடலுார் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீ சார் வழக்குப் பதிந்து ஜெய்பீம்தாசனை நேற்று கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ