மேலும் செய்திகள்
திருக்குறள் கருத்தரங்கம்
14-Oct-2025
கடலுார்: கடலுார் முதுநகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக திருக்குறள் பேரவை சார்பில் தமிழ்க்கூடல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி தலைமை தாங்கினார். ஆசிரியை சித்ரா வரவேற்றார். பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாணவிகளிடையே ஓவியம், பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடந்தன. ஆசிரியர்கள் செல்வி, சாந்தி, சித்ரா போட்டிகளை ஒருங்கிணைத்தனர். உலக திருக்குறள் பேரவையின் கடலுார் மாவட்ட தலைவர் பாஸ்கரன், வெற்றிபெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசு வழங்கி பாராட்டினார். உதவி தலைமை ஆசிரியர் அறிவழகன், ஆசிரியர்கள் சுகிருதா, ரமணி, ஜெயந்தி, தேவா, மனோகர் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் விழாவில் பங்கேற்றனர். ஆசிரியர் பாலமுருகன் நன்றி கூறினார்.
14-Oct-2025