உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  அரக்கோணம் சாலையில் மாடுகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

 அரக்கோணம் சாலையில் மாடுகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலை, கருப்படிதட்டடை கிராமத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் படுத்துள்ள மாடுகளை பிடித்து கோசாலையில் ஒப்படைக்க வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலை, கருப்படிதட்டடை வழியாக வெள்ளைகேட், கம்மவார்பாளையம், திருமால்பூர், அரக்கோணம், திருத்தணி, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், கருப்படிதட்டடை உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதியில் மாடு வளர்ப்போர் தங்களது மாடுகளை வீட்டில் கட்டி வைத்து பராமரிக்காமல் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்டு விடுகின்றனர். வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையை மறித்து மாடுகள் படுத்து கிடக்கின்றன. குறுக்கும் நெடுக்குமாக மிரண்டு ஓடும் மாடுகளால், பாதசாரிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலை, கருப்படிதட்டடை கிராமத்தில், போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து கோசாலையில் ஒப்படைக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை