சாலையோர பள்ளத்தை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
முசரவாக்கம்:முசரவாக்கம் சாலையோரம் மண் அரிப்பால் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.காஞ்சிபுரம் ஒன்றியம், முசரவாக்கம் பிரதான சாலை வழியாக பாலுசெட்டிசத்திரம், கிளார் உள்ளிட்ட பகுதிக்கு பலர் சென்று வருகின்றனர்.சமுதாய கூடம் அருகில், மண் அரிப்பால், சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, முசரவாக்கம் கிராமத்தில் சாலையோர பள்ளத்தை மண் கொட்டி சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.