உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பஸ்சில் சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

பஸ்சில் சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

எருமப்பட்டி: திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் சுந்தரராஜன், 55; இவர், தனியார் லாரி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் காலை, சுந்தரராஜன் வேலை விஷயமாக, துறையூரில் இருந்து நாமக்கல்லிற்கு பஸ்சில் புறப்பட்டார். பஸ், அலங்கா-நத்தம் பிரிவு அருகே சென்றபோது மயங்கி விழுந்துள்ளார்.அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, அலங்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உயிரிழந்தார். எருமப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி