உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அதிக விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

அதிக விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

கரூர், கரூர் மாவட்ட வேளாண் இயக்குனர் சிங்காரம் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில் நெல், சோளம், மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை, எள் மற்றும் கரும்பு ஆகிய பயிர்கள் சாகுபடிக்கு தேவையான உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் யூரியா-, 637 மெ.டன், டி.ஏ.பி., -449 மெ.டன், பொட்டாஷ்-, 769 மெ.டன், காம்ப்ளக்ஸ்,- 1,889 மெ.டன், சூப்பர் பாஸ்பேட், - 301 மெ.டன் என மொத்தம், 3,744 மெ.டன் உரங்கள் தனியார், கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை நடந்து வருகிறது.மொத்த விற்பனையாளர்கள், பிற மாவட்டங்களுக்கு உரங்களை விற்பனை செய்யக் கூடாது. மானிய விலையில் உள்ள உரங்களை, விற்பனை முனைய கருவி மூலம் விவசாயிகளின் ஆதார் அட்டையை கொண்டு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விபரங்கள் அடங்கிய தகவல் பலகை, விவசாயிகள் அறியும் வகையில் பராமரிக்க வேண்டும். அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும்.விவசாயிகளுக்கு ரசீது வழங்க வேண்டும். உரம் குறித்த புகார்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள, உர ஆய்வாளரை தொடர்பு கொள்ளலாம் அல்லது வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அதிக விலைக்கு உரம் விற்றாலோ, உரிய ஆவணமின்றி உர விற்பனை அல்லது உரம் கடத்தலில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை