நகையுடன் தப்பியவர்கள் சிக்கினர்
மதுரை: மதுரை செனாய் நகரைச் சேர்ந்த கண்ணன், அண்ணன் குருமூர்த்தியுடன் மீனாட்சி கோயில் தெருவில் சிவா ஜூவல்லர்ஸ் நடத்துகிறார். நேற்று மதியம் இரு ஆண்கள், ஒரு பெண் கடைக்கு வந்து நகையை பார்த்துக் கொண்டிருந்தபோது 16 கிராம் செயினை எடுத்துக்கொண்டு ஒரு ஆண் ஓடியுள்ளார்.அவரைத் தொடர்ந்து மற்றொரு ஆணும் ஓட, கண்ணன் பக்கத்து கடைக்காரருடன் ஓடி சென்று அவர்களை பிடித்துள்ளார். செயினை எடுத்தவர் வீரரித்வின், உடன் வந்திருந்தவர்கள் சதீஷ்குமார் ,அவரின் மனைவி ஹேமமாலினி என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேல்விசாரணை நடக்கிறது.