மேலும் செய்திகள்
ஒற்றுமை நாள் கவியரங்கம்
26-Oct-2025
மதுரை: மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில், மாமதுரை கவிஞர் பேரவை சார்பில் சிந்தனைக் கவியரங்கம் நடந்தது. பேரவைத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். செயலர் ரவி வரவேற்றார். கவிஞர் அஞ்சூரியா க.ஜெயராமன் எழுதிய 'தாத்தாவின் கவிதைகள்' நுாலை சக்திவேல் வெளியிட புரட்சிப் பாவலர் மன்றத் தலைவர் வரதராஜன் பெற்று மதிப்புரை வழங்கினார். நுாலாசிரியருக்கு வீர பாண்டியத் தென்னவன் விருது வழங்கப்பட்டது. கவிஞர்கள் கங்காதரன், அழகையா, பரமசிவம், இதயத்துல்லா, லிங்கம்மாள், முனியாண்டி, பழனி, அரங்க கிரிதரன் கவிதை பாடினர். சேதுபதி மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் கோபாலன், யாதவர் கல்லுாரி தமிழ்த் துறைத் தலைவர் பரந்தாமன் சிறப்பாக கவிதை பாடிய குறளடியான், கல்யாணசுந்தரம் ஆகியோருக்கு பரிசு வழங்கினர்.
26-Oct-2025