உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 8 மையத்தில் ஊரக திறனாய்வு தேர்வு 1,767 பேர் பங்கேற்பு: 129 பேர் ஆப்சென்ட்

8 மையத்தில் ஊரக திறனாய்வு தேர்வு 1,767 பேர் பங்கேற்பு: 129 பேர் ஆப்சென்ட்

நாமக்கல்: மாவட்டத்தில், 8 மையங்களில் நடந்த ஊரக திற-னாய்வு தேர்வில், 1,767 பேர் பங்கேற்றனர். 129 தேர்வர்கள் கலந்துகொள்ளவில்லை.'ஊரக திறனாய்வு தேர்வு' என்பது, தமிழகத்தில், ஊரக பகுதிகளில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்-களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கும் நோக்கில், அரசு தேர்வுகள் இயக்ககம் நடத்துகி-றது.இத்தேர்வு, 1991-92 முதல் நடத்தப்படுகிறது. கிரா-மப்புற மாணவர்களின் திறனை மேம்படுத்துவ-தையும், அவர்களை ஊக்கப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு, 1991-92 முதல் நடத்தப்படு-கிறது. தமிழக திறனாய்வு தேர்வில் தேர்வு செய்-யப்படும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு, 1,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.அதன்படி, நடப்பு ஆண்டிற்கான ஊரக திறனாய்வு தேர்வு, கடந்த, 29ல் நடத்த முடிவு செய்யப்பட்டி-ருந்தது. கனமழை காரணமாக, நேற்று தள்ளி வைக்கப்பட்டு நடத்தப்பட்டது. நாமக்கல் மாவட்-டத்தில், திருச்செங்கோடு, நாமகிரிப்பேட்டை, பர-மத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல், பள்ளிப்பாளையம் கிருஷ்ணவேணி மற்றும் சேந்தமங்கலம் அரசு மகளிர் மேல்நி-லைப்பள்ளி, ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளி, ரெட்டிப்பட்டி பாரதி மேல்நி-லைப்பள்ளி என, 8 மையங்களில் தேர்வு நடந்தது. 1,896 மாணவ, மாணவியர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1,767 பேர் மட்டுமே பங்கேற்றனர். 129 தேர்வர்கள் பங்கேற்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி