பள்ளி மேலாண்மை மறு கட்டமைப்பு கூட்டம்
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே சோழந்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை கட்டமைப்பு கூட்டம் நடந்தது.தலைமை ஆசிரியர் சுரேகா தலைமை வகித்தார்.பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆதில் ஷா, ஊராட்சி தலைவர் சாத்தையா முன்னிலை வகித்தனர். ஆசிரியர் கலையரசி வரவேற்றார்.கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழு குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் மாணவர்களின் பெற்றோருக்கு ஆசிரியர்கள் விளக்கினர். ஆசிரியர்கள் சுல்தான் அலாவுதீன், ராஜேந்திரன், சந்தனமாரி பங்கேற்றனர்.