உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பாம்பன் கடல் கொந்தளிப்பு மீன் பிடிக்க மீனவர்களுக்கு தடை

 பாம்பன் கடல் கொந்தளிப்பு மீன் பிடிக்க மீனவர்களுக்கு தடை

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் வீசும் சூறாவளியால் பாம்பன் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுவதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டது. வடகிழக்கு பருவக்காற்று தீவிரமடைந்து வங்கக்கடலில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசும் என வானிலை மையம் தெரிவித்தது. இதன்படி ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் நேற்று சூறாவளி வீசியதால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் கரையில் ஆக்ரோஷமாக மோதி மேலே எழுந்தன. இச்சூழலில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றால் விபரீதம் ஏற்படும் என்பதால் நேற்று முதல் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்தனர். இதனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் உள்ள 1200 விசைப்படகுகள், 500 நாட்டுப்படகுகளை கரையில் நிறுத்தப்பட்டது. மீனவர்கள் வீடுகளில் முடங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ