சேலம்: இந்திய தடகள சம்மேளனம், இந்திய விளை-யாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து, நாடு முழுதும் திறமையான பெண் தடகள வீராங்க-னைகளை தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சி அளித்து ஒலிம்பிக்கில் பங்கேற்க செய்யும் முயற்சியாக, 'அஸ்மிதா லீக்' பெயரில் தடகள சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துகிறது.அதன்படி சேலம் மரவனேரி புனிதபால் மேல்நி-லைப்பள்ளியில் நேற்று நடந்த போட்டியை, மாவட்ட விளையாட்டு விடுதி மேலாளர் கோகிலா, பள்ளி தலைமை ஆசிரியர் அலெக்ஸ் தொடங்கி வைத்தனர். 14, 16 வயது என இரு பிரி-வுகளாக, ட்ரையத்லான் ஏ.பி.சி., கிட்ஸ் ஜாவேலின், 60 மீ., முதல், 600 மீ., ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் என, 7 போட்டிகள் நடத்தப்பட்டன. 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்-றனர்.முடிவில், ேஹாலி ஏஞ்சல்ஸ் பள்ளி அணி முதலிடம், செந்தில் பப்ளிக் பள்ளி இரண்டா-மிடம், அயோத்தியாப்பட்டணம் தோழா அத்-லெடிக் அகாடமி அணி மூன்றாமிடம் பிடித்தன. வெற்றி பெற்ற அணியினருக்கு, சேலம் மாவட்ட தடகள சங்க தலைவர் விமலன், மாநகராட்சி கவுன்சிலர்கள் பரிசு வழங்கினர். ஏற்பாடுகளை தடகள சங்க செயலர் முத்துகுமார் உள்ளிட்ட நிர்-வாகிகள் செய்திருந்தனர்.