உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மயான பொறுப்பாளருக்கு நோட்டீஸ் வழங்கல்

மயான பொறுப்பாளருக்கு நோட்டீஸ் வழங்கல்

தலைவாசல்: தலைவாசல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஏரிக்கரை பகுதியையொட்டி, முஸ்லிம் சமுதாய மயானம் உள்ளது. அதன் ஒரு பகுதியில் வணிக வளாகம் கட்டுமான பணி நடக்கிறது. அந்த கட்டடத்துக்கு ஊராட்சி நிர்வாகம் மற்றும் வணிக மின் இணைப்பு பெறாமல் பணி மேற்-கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில் வணிக வளாக பகுதியொட்டி உயர் அழுத்த மின்பாதை செல்லும் நிலையில், நேற்று முன்தினம் கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளி விஸ்வநாதன், 39, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். தலைவாசல் போலீசார் வழக்குப்பதிந்தனர்.இதுதொடர்பாக தலைவாசல் உப கோட்ட மின்-வாரிய அலுவலர்கள் விசாரித்து, மயான பொறுப்-பாளர்களிடம் விளக்கம் கேட்டு, நேற்று, 'நோட்டீஸ்' வழங்கினர். தொடர்ந்து மின் ஒயரை உயர்த்திய பின், கட்டுமான பணி மேற்கொள்ள, மின்வாரிய அலுவலர்கள் அறிவுறுத்தினர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ