அப்பள இயந்திரத்தில் சிக்கி மேலாளரின் 4 விரல்கள் கட்
சேலம், சேலம் அருகே அயோத்தியாப்பட்டணத்தில், அப்பள தயாரிப்பு நிறுவனம் உள்ளது. அங்கு கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த அன்வர் உசேன், 53, உற்பத்தி மேலாளராக உள்ளார். அவர், நேற்று முன்தினம் மதியம், 2:30 மணிக்கு, அங்குள்ள ரோலர் இயந்திரத்தை இயக்கியுள்ளார். அதில் எதிர்பாராத வகையில், அவரது இடது கை சிக்கி, 4 விரல்கள் துண்டாகின. இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.