உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அடகு கடைக்காரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

அடகு கடைக்காரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

சேலம்: அடகு கடைக்காரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய நபரை, போலீசார் தேடுகின்றனர். சேலம், தாதகாப்பட்டியை சேர்ந்தவர் திருத்தணி செல்வம், 53. இவர், தன் வீட்டருகே நகை அடகு கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணிக்கு, வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த பைக் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி, வீட்டுக்குள் வீசியபோது, பைக் மீது விழுந்து தீப்பிடித்து எரிந்தது தெரிந்தது. புகாரில், அன்னதானப்பட்டி போலீசார், மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ