உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  திருவாலங்காடில் கை கொடுத்த மழை உழவு பணியில் விவசாயிகள் மும்முரம்

 திருவாலங்காடில் கை கொடுத்த மழை உழவு பணியில் விவசாயிகள் மும்முரம்

திருவாலங்காடு: திருவாலங்காடில் மழையின் காரணமாக நீர் நிலைகள் நிரம்பியதை அடுத்து விவசாயிகள் உழவுப்பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். திருவாலங்காடு ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. இங்கு களாம்பாக்கம், பாகசாலை, ஓரத்துார், கூளூர், மணவூர் உள்ளிட்ட கிராமங்களில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இந்தாண்டு வடகிழக்கு பருவமழை கை கொடுத்த நிலையில், ஏரி, குளம், குட்டைகள், கிணறு உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இதனால் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பாசன விவசாயிகள், கார்த்திகை பட்டத்தில் நெல் நடவு செய்ய, தங்களது நிலங்களை மாடு பூட்டியும், டிராக்டர் வாயிலாக உழவும் செய்து வருகின்றனர். இந்த பருவத்தில் ஒன்றியத்தில் 12,000 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட உள்ளது. விவசாய பணிகள் மும்முரமாக நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை