உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  பள்ளி, கல்லுாரிக்கு இன்று விடுமுறை

 பள்ளி, கல்லுாரிக்கு இன்று விடுமுறை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 'டிட்வா' புயல் காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால், பள்ளி, கல்லுாரிக்குச் சென்ற மாணவ - மாணவியர் கடும் அவதிப்பட்டனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மாணவ - மாணவியர் நலன் கருதி, இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லுாரிகளுக்கும் விடுமுறை அளித்து, கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ