உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / நின்றிருந்த லாரி மீது கார்‍ மோதல் மாமியார், மருமகன் பலி

நின்றிருந்த லாரி மீது கார்‍ மோதல் மாமியார், மருமகன் பலி

திருப்பத்துார், கோவை மாவட்டம், கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் திவ்யமோன், 50. இவரது மனைவி லவ்லி, 47. இவரின் தாய் ரோஸ்லி, 72. மூவரும் நேற்று காலை ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மஹேந்திரா காரில் சென்றனர். காரை லவ்லி ஓட்டினார். திருப்பத்துார் மாவட்டம், சென்னை - பெங்களூரு சாலையில், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அங்கு சாலையோரம், சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு சரக்கு ஏற்றி சென்ற லாரி நிறுத்தப்பட்டிருந்தது. அதன் மீது, அதிகாலை, 5:00 மணியளவில், துாக்க மயக்கத்தில், லவ்லி ஓட்டிச்சென்ற கார் மோதியது. இதில், லவ்லியின் கணவர் திவ்யமோன், தாய் ரோஸ்லி சம்பவ இடத்திலேயே பலியாயினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை