உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ஆபத்தான நிலையில் பஸ் ஸ்டாப் நிழற்கூரை

 ஆபத்தான நிலையில் பஸ் ஸ்டாப் நிழற்கூரை

உடுமலை: உடுமலை எலையமுத்துார் பிரிவு பஸ் ஸ்டாபில் உள்ள, பயணியர் நிழற்கூரை பராமரிப்பின்றி வீணாகி வருகிறது. உடுமலை - தளி ரோட்டில், எலையமுத்துார் பிரிவு பஸ் ஸ்டாப் பகுதியில், பயணியர் வசதிக்காக நிழற்கூரை அமைக்கப்பட்டது. நிழற்கூரை கட்டடம் பராமரிப்பின்றி, சிதிலமடைந்தும், புதர் மண்டியும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. அரசு கல்லுாரி, கோட்டாட்சியர் அலுவலகம், போக்குவரத்து துறை அலுவலகம், அரசு மாணவ, மாணவியர் விடுதி, தனியார் பள்ளிகள் அமைந்துள்ள நிலையில், ஏராளமான பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் இந்த பஸ் ஸ்டாப்பை பயன்படுத்தி வருகின்றனர். மூன்று ரோடு சந்திப்பு பகுதியில், ரோட்டின் மத்தியில் ஆபத்தான நிலையில் பயணியர் காத்திருக்கின்றனர். வெயில், மழையிலும் காத்திருக்கும் நிலைக்கு தீர்வு காண, பஸ் ஸ்டாப் நிழற்கூரையை பயன்படுத்தும் வகையில், புதுப்பிக்க வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை