நாராயணகவி பிறந்த நாள்; மாலை அணிவித்து மரியாதை
உடுமலை; உடுமலையில், சுதந்திர போராட்டத்தின் போது, தேசிய உணர்வு மிக்க பாடல்கள் எழுதி, மேடைகளில் பாடியவரும், பகுத்தறிவு கவிஞர் உடுமலை நாராயணகவி பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. உடுமலை குட்டை திடலிலுள்ள நாராயண கவி மணி மண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில், அமைச்சர் சாமிநாதன் மற்றும் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.