உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  திருமூர்த்திமலை அருவிக்கு அனுமதி; சுற்றுலா பயணியர் உற்சாகம்

 திருமூர்த்திமலை அருவிக்கு அனுமதி; சுற்றுலா பயணியர் உற்சாகம்

உடுமலை: திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவியில் நீர் வரத்து சீரானதையடுத்து, சுற்றுலா பயணியர், பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில் பெய்த கன மழை காரணமாக, மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கடந்த இரு நாட்களாக, சுற்றுலா பயணியர், பக்தர்கள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மலைப்பகுதிகளில் மழை குறைந்து, அருவியில் நீர் வரத்து சீரானதையடுத்து, நேற்று காலை முதல் அருவிக்கு செல்ல அனுமதியளிக்கப்பட்டது. சபரி மலை சீசன் துவங்கியுள்ளதால், பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியர் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி