உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  சமூக நீதி, மனித உரிமைகள் விழிப்புணர்வு கருத்தரங்கு

 சமூக நீதி, மனித உரிமைகள் விழிப்புணர்வு கருத்தரங்கு

அவிநாசி: திருப்பூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனிதஉரிமைகள் பிரிவு சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு கருவலுாரில் நடந்தது. எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் தலைமை தாங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சதீஷ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அரசு சிறப்பு வழக்கறிஞர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டி.எஸ்.பி.க்கள் வெற்றிவேந்தன், சிவகுமார், இன்ஸ்பெக்டர் ராஜ பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு எஸ்.பி. அசைவ விருந்து பரிமாறியதோடு, அவர்களுடன் உணவு அருந்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ