உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேர் கைது

 அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேர் கைது

விழுப்புரம்: அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். காணை சப் இன்ஸ்பெக்டர் நடராஜன், அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சாணிமேட்டைச் சேர்ந்த சுரேஷ், 26; என்பவர் தனது பைக்கில் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக வந்தது தெரியவந்தது. உடன் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். இதேபோன்று, விழுப்புரம் நகராட்சி திடல் எதிரில் அதிவேகமாக பைக் ஓட்டிய தோகைப்பாடியைச் சேர்ந்த ராம்குமார், 21; என்பவரை, தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகர் வழக்குப் பதிந்து கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை