உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  விழுப்புரம் பெருமாள் கோவிலில் கார்த்திகை கைசிக ஏகாதசி விழா

 விழுப்புரம் பெருமாள் கோவிலில் கார்த்திகை கைசிக ஏகாதசி விழா

விழுப்புரம்: கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசியை முன்னிட்டு, விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில், நேற்று கைசிக ஏகாதசி மகோற்சவம் நடந்தது. அதனையொட்டி, காலை 9:00 மணியளவில், ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்திலும், தொடர்ந்து மாலை 6:00 மணியளவில் கருட வாகனத்தில் கோவில் பிரகாரத்தில் வலம் வந்து, உற்சவ மண்டபத்தில் அருள்பாலித்தார். இதையடுத்து, 15க்கும் மேற் பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்ற சிறப்பு நாதஸ்வரம், மேளக்கச்சேரி நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை