உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முதியவர் மாயம் : போலீஸ் விசாரணை

முதியவர் மாயம் : போலீஸ் விசாரணை

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே பனையபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 65; கூலித் தொழிலாளி. இவர் கடந்த 25ம் தேதி அன்று மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசில் அவரது தம்பி ஏழுமலை புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை