நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகம் சார்பில் நாளை (நவ. 14) காலை 11:00 மணிக்கு வன விரிவாக்க மையத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதில் துணை இயக்குனர் முருகன், விவசாயிகள் குறைகளை கேட்டறிய உள்ளார். எனவே, விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என வனத்துறை தெரிவித்துள்ளது.