உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  நடுவப்பட்டியில் மக்காச்சோளத்தை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்

 நடுவப்பட்டியில் மக்காச்சோளத்தை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்

சிவகாசி: சிவகாசி அருகே நடுவப்பட்டிபகுதிகளில் மக்காச்சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். சிவகாசி தாலுகாவில் கடந்த ஆண்டு 2650 ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டும் அதே போல் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. நடுவப்பட்டி, வடபட்டி, ஈஞ்சா, புவனாதபுரம் ,கிருஷ்ண பேரி, நாகலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 1000 ஏக்கருக்கு மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு உழவு, விதைப்பு, களை எடுத்தல், உரமிடுதல் என ரூ. 20 ஆயிரத்திற்கு மேல் செலவாகி உள்ளது. தற்போது மக்காச்சோளம் பயிர் பூவிட்டு காய் வைக்கும் பருவத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் காட்டுப்பன்றிகள் இரவில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்துகின்றது. இரவில் வரும் காட்டுப் பன்றிகளை விரட்டுவதற்காக விவசாயிகள் முயற்சி செய்கையில் அவர்களை தாக்க வருகின்றது. இதனை கட்டுப்படுத்த வழி தெரியாமல் விவசாயிகள் விழி பிதுங்கி நிற்கின்றனர். காளிமுத்து, விவசாயி: நடுவப்பட்டி, மக்காச்சோளம் சாகுபடிக்கு செய்துள்ளேன். காய் வைக்கும் பருவத்தில் வந்த நிலையில் காட்டுப்பன்றிகள் மக்காச்சோளத்தை நாசப்படுத்துகிறது. நன்றாக விளைந்தால் ஒரு ஏக்கருக்கு 20 முதல் 25 குவிண்டால் மக்காச்சோளம் அறுவடை செய்யலாம். ஆனால் காட்டு பன்றிகள் பயிர்களை சேதப்படுத்துவதால் விளைச்சல் குறைவாகத்தான் இருக்கும். இதனால் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ