உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வரின் முகவரி துறையில் 7 மாதங்களில் 8.70 லட்சம் மனுக்கள் நிலுவை

முதல்வரின் முகவரி துறையில் 7 மாதங்களில் 8.70 லட்சம் மனுக்கள் நிலுவை

சென்னை:'முதல்வரின் முகவரி துறைக்கு, பொது மக்கள் கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை அனுப்பிய, 21 லட்சம் மனுக்களில், 8.70 லட்சம் மனுக்கள் நிலுவையில் உள்ளன' என, அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில், 2021ல் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதும், பொதுமக்கள் மனு அளிக்க, 'முதல்வரின் முகவரி' என, தனி துறை துவக்கப்பட்டது. இத்துறைக்கு பொது மக்கள் தபால் வாயிலாகவும், ஆன்லைன் முறையிலும் மனுக்களை அனுப்புகின்றனர். அவை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்படுகின்றன. அவற்றுக்கு தீர்வு காணப்படுவதை, ஆன்லைன் வழியே கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்கள் தங்கள் மனு எங்கு உள்ளது, என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை அறியவும் வசதி ஏற்படுத்தப்பட்டது. இத்துறைக்கு வரும் மனுக்கள் மீதான நடவடிக்கையை, குறிப்பிட்ட கால இடைவெளியில், தலைமைச் செயலர் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார். எனினும் அங்கு தீர்வு காண வேண்டிய மனுக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குறித்து வருவாய் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், நடப்பாண்டு, ஜன., முதல் ஜூலை இறுதி வரை, முதல்வரின் முகவரி துறைக்கு, 21.24 லட்சம் மனுக்கள் வந்துள்ளன. இதில், 9.62 லட்சம் மனுக்கள் ஏற்கப்பட்டு, நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பல்வேறு காரணங்கள் அடிப்படையில், 2.91 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும், 8.70 லட்சம் மனுக்கள் நிலுவையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

R.RAMACHANDRAN
செப் 12, 2025 07:50

தீர்வு காணப்பட்டதாக மூடிவிட்டு அவற்றில் கோரப்பட்ட கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றவில்லை.பொய்யர்கள் அவர்கள் லஞ்ச ஊழல் தொழிலுக்கு இடையூறு இல்லாமல் இருக்க இணைய வழி செய்யும் மனுக்கள் மீது தீர்வு காண்பது இல்லை.இது குறித்து எங்கு புகார் செய்தாலும் குற்றவாளிகளுக்கே அந்த புகார்கள் அனுப்புவதால் துணிந்து குற்றங்கள் புரிகின்றனர்.


Durai Kuppusami
செப் 12, 2025 07:49

தமிழகத்தின் கடன் சுமை தொடர்ந்து உயர்கிறது அந்த மாதிரிதான் இதுவும் இதற்கு விடியல் எங்கே நீங்கள்தான் சொல்லணும்....


Mani . V
செப் 12, 2025 05:25

இதில் ஆற்றில் வீசியதையும், பஜ்ஜி, போண்டா கடையில் எடைக்குப் போட்டதையும் கணக்கில் சேர்த்தீர்களா?


N S
செப் 12, 2025 04:43

பெட்டியில் போட்ட மனுக்களை ஆற்றில் கொட்டியது போல இங்கே செய்ய முடியாது.


Kasimani Baskaran
செப் 12, 2025 03:52

மனுக்களை தண்ணீரில் போடாமல் நேரடியாக பழைய பேப்பர் கடைக்கு போட்டு அங்கு துகள் துகளாக கிழித்து எரித்து விடுவார்கள்...


Modisha
செப் 12, 2025 02:18

சும்மா டோபா போட்டுண்டு நாடக கம்பெனி நடத்துறாரு .


புதிய வீடியோ