உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டில்லியில் அமித்ஷா உடன் இபிஎஸ் ஆலோசனை

டில்லியில் அமித்ஷா உடன் இபிஎஸ் ஆலோசனை

புதுடில்லி: டில்லி சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். 'அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும்' என, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குரல் கொடுத்தார். அதை ஏற்க மறுத்த இபிஎஸ் அவரது கட்சி பதவிகளை பறித்தார். இதையடுத்து, டில்லி சென்ற செங்கோட்டையன், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார். இருவரும் தன்னை டில்லிக்கு அழைத்து, அதிமுகவை ஒருங்கிணைப்பது குறித்து பேசியதாகவும் கூறினார். இது, பழனிசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், அதிமுகவிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. தேஜ கூட்டணியில் இருந்து தினகரன், ஓபிஎஸ், உள்ளிட்டோரும் வெளியேறினர்.இந்த பரபரப்பான சூழ்நிலையில் இபிஎஸ் இன்று விமானம் மூலம் டில்லி சென்றார்.அவருடன் கே.பி. முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் உடன் சென்றனர். விமான நிலையத்தில் தம்பிதுரை, இன்பதுரை, சி.வி.சண்முகம் உள்ளிட்ட எம்பிக்கள் அவரை வரவேற்றனர். காலையில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை, இபிஎஸ் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.இந்நிலையில், இன்று இரவு டில்லியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இபிஎஸ் சந்தித்து பேசினார். அவருடன் கே.பி.முனுசாமி, வேலுமணி, தம்பிதுரை, சி.வி.சண்முகம் ஆகியோரும் அமித்ஷாவை சந்தித்தனர். இதன் பிறகு, நிர்வாகிகள் வெளியேறிய நிலையில், அமித்ஷா உடன் இபிஎஸ் தனியாக ஆலோசனை நடத்தினார்.நேற்று, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஆட்சியை பாஜ தான் காப்பாற்றியது என இபிஎஸ் கூறியிருந்த நிலையில், இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக பாஜ கூட்டணி அமைந்த பிறகு டில்லி சென்று அமித்ஷாவை தற்போது தான் இபிஎஸ் சந்தித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Easwar Kamal
செப் 17, 2025 23:03

எடபடியார் மலை முழுங்கி மஹாதேவன். ஆட்சி கட்டில் விட கட்சி கட்டில்தான் முக்கியம். எடப்பாடியாரை தூக்கி பிடிக்கின்ற வர்களுக்குத்தான் பிரச்சனை. பல பேர் டெபாசிட் கூட இழக்கலாம். அது பற்றி எல்லாம் எடப்பாடியாருக்கு கவலை இல்லை.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 17, 2025 09:04

எலையை யாரு தூக்கிப் போடுறதுன்னா?


vadivelu
செப் 17, 2025 06:59

நாம் காங்கிரஸுக்கே இடம் கொடுக்களையே. காங்கிரஸ் தனியாக நின்றால் பெரும்பான்மை இடங்களில் டிபாசிட் கிடைக்காது. ஆனால் பா ஜா கா அவர்களை விட பலம் வாய்ந்துதான் தமிழிகத்தில் இருக்கிறது. தி மு க, அண்ணா தி முக விற்கு அடுத்து பா ஜா கா மட்டுமே மூன்றாவது பெரிய கட்சி.


Kasimani Baskaran
செப் 17, 2025 04:13

எசப்பாடியார் ஆத்தா தீம்க்காவை முடித்து வைக்கும் பணியை திறம்பட செய்கிறார். தேர்தலுக்காகவாவது மற்ற ஆத்தா தீமகாவின் பிரிவுகளுடன் சேர்ந்து உழைத்து வெற்றி பெற்று அதன் பின் மல்லுக்கட்டினால் நல்லது.


Oviya Vijay
செப் 16, 2025 23:43

இங்கே கடன் கிடையாது என ஆங்காங்கே போர்டு வைத்திருப்பதை நாம் பார்த்திருப்போம்... அதே போல் தமிழகத்தில் சங்கிகளுக்கு இடம் கிடையாது என மக்கள் தங்கள் மனங்களில் போர்டு வைத்துள்ளனர்.,. ஆகையால் தான் ஜீ யும் ஷா வும் என்னென்ன செய்தாலும் எத்தனை ரோடு ஷோ நடத்தினாலும் தமிழ்நாட்டில் மட்டும் பாஜக-வால் காலூன்ற முடியாது...


Jagannathan Narayanan
செப் 17, 2025 07:18

முட்டு கொடுத்தாகிவிட்டது.


Gokul Krishnan
செப் 16, 2025 22:10

ஓஹோ ஜன்டா பஞ்சாயத்து வேலை எல்லாம் நல்லா செய்வார் லேடியா மோடியா என்று கேட்ட தலைமை எங்கே தன் கட்சி பூசலை தீர்க்க முடியாமல் எதற்கும் சரண் அடையும் இப்போதைய தலைமை எங்கே சிறு வயதில் கேள்விப்பட்ட ஒரு துண்டு ரொட்டிக்கு சண்டை போட்ட ரெண்டு பூனையும் சமரசம் செய்து வைத்த குரங்கு கதை தான் ஞாபகம் வருகிறது


Oviya Vijay
செப் 16, 2025 22:08

ஜீ மற்றும் ஷா இருவரின் பாச்சாவும் பலிக்காத தென்னிந்தியாவின் ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே... இங்கே கடன் கிடையாது என ஆங்காங்கே போர்டு வைத்திருப்பதை நாம் பார்த்திருப்போம்... அதே போல் தமிழகத்தில் சங்கிகளுக்கு இடம் கிடையாது என மக்கள் தங்கள் மனங்களில் போர்டு வைத்துள்ளனர்.,. ஆகையால் தான் ஜீ யும் ஷா வும் என்னென்னவோ செய்து பார்த்தும் தமிழ்நாட்டில் மட்டும் பாஜகவால் காலூன்ற முடியவில்லை...


திகழ்ஓவியன்
செப் 16, 2025 21:51

என்ன பழனி முகம் வெளிறி இருக்கு , ஜெண்டா வேப்பிலையில் மந்திரிச்சி இருக்காரா , என்னவோ இங்க தன்மானம் ரோசம் எல்லாம் சொல்லி அங்கு பம்மி இருக்கிறார் பாவம் மகனை காக்கணும் சம்பந்திய மீட்கணும் இருக்காதா பாசம்


ஜெய்ஹிந்த்புரம்
செப் 17, 2025 07:10

மகன், சம்பந்தி கவலை பழனிசாமிக்கு தேவையில்லை, ஏன்னா அந்த ஊழல் வழக்கிலே எடியூரப்பா மகன் விஜயேந்திரனும் கூட்டுக்களவாணி என்று வழக்கு சொல்கிறது. இவரை மாட்டினா கர்நாடக பாஜக கலகலத்துப் போகும். அதான் ஜண்டாவுக்கு ஜண்டுபாம் தடவுற அளவுக்கு மண்டைக் குடைச்சலாம்


saravanan
செப் 16, 2025 21:50

பாஜக அதிமுக கூட்டணி என்பது வெற்றிக் கூட்டணி கொள்கை கோட்பாடுகளில் ஒரளவேனும் ஒத்திசைவு கொண்ட மாற்றத்திற்கான கூட்டணி. வான் நட்சத்திரங்களையும் சரி, திரை நட்சத்திரங்களையும் சரி தொலைவிலிருந்து பார்த்து ரசிக்கலாமே தவிர வாழ்வியல் மாற்றத்திற்கான வினை ஊக்கிகளாக கருத முடியாது எம்ஜியாரும் ஜெயலலிதாவும் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள். கூட்டணி கட்சிகளின் உள்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிட விரும்பா விட்டாலும் கூட்டணிக்குள் குழப்பங்கள் வராமல் தவிர்க்க வேண்டிய பொறுப்பு நாட்டு மக்களின் அபிமானம் பெற்ற ஆளும் கட்சி என்ற முறையில் அத்தலைவர்களுக்கு நிச்சயமாக இருக்கின்றது தலைவர்கள் ஒற்றுமையாக செயல்படும் போது தான் தொண்டர்களும் முழு மனதுடன் முழு வீச்சில் பணியாற்றுவார்கள்


Raja
செப் 16, 2025 21:40

திரு.அமித்ஷா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.... ஆனால்... கட்டு சோற்றுக்குள் பெருச்சாளி வைத்திருப்பது போல் அதிமுக-பி.ஜே.பி. கூட்டணியை பலவீனமாக்க முயற்சி செய்யும் திமுகவின் ஸ்லீப்பர் செல் அண்ணாமலையை கட்சிக்குள் வைத்திருப்பது ஆபத்தானது.


புதிய வீடியோ