உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்வு

 ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்வு

சென்னை:தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 300 ரூபாயும், சவரனுக்கு 2,40 0 ரூபாயும் உயர்ந்தது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 11,600 ரூபாய்க்கும், சவரன் 92,800 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 173 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று காலை, தங்கம் விலை கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து, 11,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 1,600 ரூபாய் அதிகரித்து, 94,400 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து, 182 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று மாலை, தங்கம் விலை கிராமுக்கு மீண்டும் 100 ரூபாய் உயர்ந்து, 11,900 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து, 95,200 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, 183 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் தங்கம் கிராமுக்கு 300 ரூபாயும், சவரனுக்கு 2,400 ரூபாயும் உயர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை