உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜெ., இருக்கும் போதே முதல்வராக ஆசைப்பட்டவர்

ஜெ., இருக்கும் போதே முதல்வராக ஆசைப்பட்டவர்

அ.தி.மு.க.,வுக்கு எதிராக செங்கோட்டையன் வழக்கு தொடரட்டும்; எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். பழனிசாமிக்கு முன் பிறந்தவர் என்ற ஒரு தகுதி மட்டுமே செங்கோட்டையனுக்கு உள்ளது. முதல்வர் வாய்ப்பு, இரண்டு முறை வந்ததாகச் சொல்லும் செங்கோட்டையன், அதை ஏன் விட்டுக் கொடுத்தார் என்பதையும் சொல்ல வேண்டும். ஜெயலலிதா இருக்கும்போதே, முதல்வராக வர வேண்டும் என செங்கோட்டையன் ஆசைப்பட்டார். அதை, கட்சி நிர்வாகிகள் ஆதாரத்துடன் ஜெயலலிதாவிடம் சொன்னதால், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. கோடநாடு வழக்கில் பழனிசாமி குற்றவாளி என்றால், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்காதது ஏன்? குற்றவாளி என்றால், கைது செய்திருக்கலாமே. தி.மு.க.,வுக்கு திராணி இருந்தால், கடந்த ஐந்து ஆண்டுகளில் இதை செய்திருக்க வேண்டும். அ.தி.மு.க.,வில் ராஜாவாக இருந்த செங்கோட்டையன், துரோகிகளிடம் சேர்ந்து கூஜா துாக்கச் சென்று விட்டார். - சீனிவாசன் முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

VENKATASUBRAMANIAN
நவ 02, 2025 08:24

முதலில் இப்படி பொதுவெளியில் பேசுவதை நிறுத்துங்கள். நாளை சமரசமாகி ஒன்ற சேர்ந்தால் இதுவே எதிராக அமையும்.அவரை நீக்கி விட்டீர்கள். அமைதியாக இருக்க வேண்டும்.


Raj
நவ 02, 2025 06:43

எப்பவுமே உமக்கு வாய்ப்பில்லை ராசா.


Vasan
நவ 02, 2025 02:18

மாண்புமிகு ஜெயலலிதாவால், அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட, திரு.செங்கோட்டையனுக்கு, மீண்டும் அமைச்சர் பதவி கொடுத்ததன் மூலம், திரு.எடப்பாடி அவர்கள், மாண்புமிகு ஜெயலலிதாவுக்கு, துரோகம் செய்துவிட்டார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை