உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனமழை எச்சரிக்கை; மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கனமழை எச்சரிக்கை; மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கனமழை எச்சரிக்கை காரணமாக, மயிலாடுதுறையில் இன்று (டிச.,11) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார்.தென்கிழக்கு வங்கக்கடலில், பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில், காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானது. நேற்று காலை நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக அது வலுவடைந்துள்ளது. மாலை நிலவரப்படி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு, வடமேற்கில், இலங்கை மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இது, தற்போது மெல்ல நகர்வதால், புயலாக மாறுவதற்கான வாய்ப்பு எதுவும், தற்போதைய நிலவரப்படி தெரியவில்லை. இதன் காரணமாக, தமிழகத்தில் அனேக இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று, இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்கும் மிதமான மழை தொடரும்.கடலுார், மயிலாடு துறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று (டிச.,11) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதற்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக, மயிலாடுதுறையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sundarsvpr
டிச 11, 2024 09:24

தென் மேற்கு பருவ மழை நீர் அணைகளில் தேக்கப்பட்டு பாசனத்திற்கு உபயோகப்படுகிறது. சோழ நாட்டில் பெய்திடும் வட கிழக்கு பருவ மழை நீர் அதிகமாக தேக்கப்படாமல் கடலில் கலக்கிறது. இதனை தவிர்க்க அரசு யோசிக்கவேண்டும். இந்த பகுதியில் ஏரி கண்மாய்கள் கட்டி வறண்ட பகுதியான தென்மாவட்டங்களுக்கு ஏன் உபயோகம் செய்யக்கூடாது.?


MARI KUMAR
டிச 11, 2024 07:13

விடுமுறை அறிவித்தாலே, வந்த கனமழையும் நின்றுவிடும் என்பது தெரிந்த விஷயம்...


சமீபத்திய செய்தி