உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பருத்திக்கு உரிய விலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை

பருத்திக்கு உரிய விலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை

சென்னை : 'தமிழகத்தில் பருத்திக்கு உரிய விலை பெற, விவசாயிகள் பருத்தியை தரம் பிரித்து, ஒழுங்கு முறை விற்பனை கூடங்களுக்கு கொண்டு வந்து விற்கலாம்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தமிழகத்தில், 2024 - 25ம் ஆண்டில், 2.55 லட்சம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு, 36,000 டன் பஞ்சு உற்பத்தியானது. நடப்பாண்டு, 4.40 லட்சம் ஏக்கரில், பருத்தி சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது டெல்டா மாவட்டங்களில் உள்ள, 17 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், 14,115 விவசாயிகள் மற்றும் 26 வர்த்தகர்கள், பருத்தி பரிவர்த்தனை செய்திட பதிவு செய்துள்ளனர். இதுவரை, 9 கோடி ரூபாய் மதிப்பிலான, 1,511 டன் பருத்தி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. பருத்தியின் தரத்திற்கு ஏற்ப, ஒரு குவிண்டாலுக்கு அதிகபட்ச விலையாக, 7,700; குறைந்தபட்ச விலையாக 4,111; சராசரி விலையாக 5,850 ரூபாய் என்ற அளவில், பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகம் முழுதும் இதுவரை 1,976 டன் பருத்தி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. பருத்தியின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.தேசிய பருத்தி வாரியமும், தமிழகத்தில் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தப்பட்டு உள்ளது. விவசாயிகள் பருத்தியில் லாபகரமான விலை பெற, பருத்தியை உலர்த்தி, தரம் பிரித்து, அருகில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடங்களுக்கு கொண்டு செல்லவும். வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மாநில அலுவலர்கள், டெல்டா மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு நடத்தி, பருத்திக்கு லாபகரமான விலை கிடைக்க செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருத்தி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்திட, தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

VKV.RAVICHANDRAN
ஜூன் 28, 2025 10:10

நாங்கள் விளைவிக்கும் பருத்திக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்ற கோரிக்கை பருத்தி விவசாயிகளின் நிரந்தரகோரிக்கையாக இருந்து வருகிறது. அரசால் ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச ஆதரவு விலையைக்காட்டிலும் MSP மிகவும் குறைவாகவே இடைத்தரகர்களாலும் ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களிலும் வாங்கப்படுகின்றன . குறைந்த பட்ச ஆதரவு விலையைக்காட்டிலும் குறைந்த விலைக்கு பருத்தி சந்தை விலை குறையும் போது காட்டன் கார்ப்பொரேஷன் ஆப் இந்தியா CCI குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு வாங்கவேண்டும். ஆனால் அப்படி நடப்பதில்லை. ஜவுளித்துறை நிறுவனங்கள், " முதிர்ந்த சுத்தமான பருத்தி க்கு நாங்கள் குறைந்த பட்ச ஆதரவு விலையைக்காட்டிலும் அதிக விலைக்கு வாங்குகிறோம். ஆனால் முதிர்ச்சியடையாத ஈரப்பஞ்சுகள் மற்றும் சுத்த மில்லாத பஞ்சுகள் தரமான நூல் நூற்றிட முடியாது .அவைகளே குறைந்த விலைக்கு வாங்கப்படுகின்றன" என்று சொல்கிறார்கள் .பருத்தி எடுக்க ஆட்கள் பற்றாக்குறை காரணமாக கிலோ கணக்கில் சம்பளம் தரவேண்டிய சூழ்நிலையில் விவசாயிகள் உள்ளனர் . முதிராத பஞ்சுகளே எடை அதிகம் நிற்கும் என்பதாலேயே விவசாய தொழிலாளர்களும் அப்படிப்பட்ட முழுதும் முதிர்ச்சியடையாத பஞ்சுகளை எடுக்கின்றனர் . நல்ல தரமான பஞ்சுகளை எடுக்க சற்று கூடுதல் சிலவானாலும் அறுவடை செய்யவேண்டும் . பருத்தி கொள்முதல் செய்வோரும் நல்ல தரமான பஞ்சுகளுக்கு மதிப்பளித்து நல்ல விலை தர வேண்டும் .அரசாங்கம் நிர்ணயத்திருப்பது குறைந்த பட்ச ஆதரவு விலை .அதிக பட்ச விலை கிடையாது . எனவே தரத்திற்கேற்ற விலை கொடுத்தால்தான் பருத்தி துறையினருக்கு உலக தரமான பருத்தி கிடைக்கும் . எப்படி பருத்தி ஆடைகளுக்கு பிரீமியம் விலை நிர்ணயிக்கிறார்களோ அதேபோல நல்ல பருத்திக்கும் விலை கிட்டவேண்டும் என்பதே சரியான தீர்வாகும் .


Kasimani Baskaran
ஜூன் 28, 2025 08:36

சுதந்திரம் வாங்கி முக்கால் நூற்றாண்டு ஆனாலும் கூட அரசு கொள்முதல் செய்யும் நெல் பருத்தி போன்றவற்றை சேமிக்க உருப்படியான கிட்டங்கிகள் கூட கிடையாது. ஆனால் உலகில் நீளமான இயற்க்கை கடற்கரைகளில் ஒன்றான மெரினா கடற்கரை முழுக்க பல்லாயிரம் கோடி பெருமானை நிலங்களை ஆக்கிரமித்து திராவிட கல்லறைகள் அமைத்துள்ளார்கள். இன்னும் ஒரு நூற்றாண்டு ஆனால் முகதான் இந்திய சுதந்திரம் வாங்க கடுமையாக பாம்புகளுக்கு பள்ளிகளுக்கும் இடையில் படுத்து கடுமையாக போராடினார் என்று பாடத்திட்டத்தில் பதிவிட்டிருப்பார்கள். பின் குறிப்பாக ராமாசாமி ஒரு துண்டு நன்கொடையாக கொடுத்தார் என்பதையும் மறக்காமல் பதிவிட்டு இருப்பார்கள் ...


Kasimani Baskaran
ஜூன் 28, 2025 13:58

எனது தோழர் ஒருவர் போன் செய்து அவர் எங்கு பள்ளிகளுக்கு இடையில் படுத்து தூங்கினார் என்று கேள்வி கேட்டு அவரது கண்டனத்தையும் கூட பதிவு செய்தார்...