உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வின் பொய் பிரசாரங்களை உடைக்கும் தமிழக மாணவர்கள்: அண்ணாமலை பெருமிதம்

தி.மு.க.,வின் பொய் பிரசாரங்களை உடைக்கும் தமிழக மாணவர்கள்: அண்ணாமலை பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் மேற்கொண்டு வரும் நீட் தேர்வுக்கெதிரான பொய் பிரசாரங்களை உடைத்து, ஒவ்வொரு ஆண்டும் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் சாதித்துக் கொண்டிருப்பது பெருமைக்குரியது '', என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் முதல் 100 இடங்களில், தமிழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் இடம்பெற்று சாதனை படைத்து உள்ளனர்.இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நீட் தேர்வில், தமிழகத்தில் தேர்வெழுதிய மாணவர்களில், 76,181 மாணவர்கள், தகுதி மதிப்பெண்கள் பெற்றுள்ளதும், முதல் 100 இடங்களில் 6 இடங்களை, தமிழக மாணவர்கள் பிடித்துள்ளதும், மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ, மாணவியர் அனைவருக்கும், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். https://x.com/annamalai_k/status/1933818793471656112தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் மேற்கொண்டு வரும் நீட் தேர்வுக்கெதிரான பொய் பிரசாரங்களை உடைத்து, ஒவ்வொரு ஆண்டும் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் சாதித்துக் கொண்டிருப்பது பெருமைக்குரியது. தி.மு.க., அரசு, இனியாவது தனது பொய் பிரசாரங்களை நிறுத்திவிட்டு, அரசு மருத்துவக் கல்லூரிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

பாரத புதல்வன்
ஜூன் 15, 2025 06:54

நீட் தேர்வில் சாதித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. மென்மேலும் வளர வாழ்த்துகிறோம். நீட் எதிப்பாளர்கள் அனைவரும் கோபாலபுரம் சென்று அங்கு எறியப்படும் 200 ஓவாயை பொருக்கிக்கொண்டு அப்பா நடத்தும் சரயாகடைக்கு சென்று பாட்டிலுக்கு110 ரூபாய் கூடுதலாக குடுத்து வாங்கி குடித்து மட்டையாகி விடவும்


ராமகிருஷ்ணன்
ஜூன் 15, 2025 04:26

எங்கே முதல் கையெழுத்து


Madhavan
ஜூன் 14, 2025 22:05

தற்போது வெளி வந்துள்ள நீட் தேர்வு முடிவுகளைப் பார்த்து நீட்" தேர்வு எதிர்ப்பாள்ர்கள் எவரும் தீக்குளிப்பது, தற்கொலை செய்து கொள்வது போன்ற செயல்களில் இறங்கி விடாதீர்கள். தற்கொலை என்பது எதற்கும் தீர்வல்ல... தமிழர்களுக்கு சுய மரியாதை, தன்மான உணர்ச்சி அதிகம் எனவே எச்சரிக்க வேண்டியுள்ளது... ப்ளீஸ்..


T.sthivinayagam
ஜூன் 14, 2025 21:42

பா.ஜ.,வுக்கு இரண்டு தலைவர் பா.ம.க.,விற்கு இரண்டு தலைவர்கள் அ.தி.மு.க.,விற்கு நாலு தலைவர்கள் கூட்டனி ஆட்சி அமைத்தால் எந்த தலைவருக்கு பதவி கிடைக்கும்?மக்கள் கேட்கிறார்கள்...


venugopal s
ஜூன் 14, 2025 20:07

இப்படியும் சொல்லலாம், மத்திய பாஜக அரசு எத்தனை முட்டுக்கட்டைகள் போட்டாலும் தமிழர்கள் அதை எல்லாம் முறியடித்து முன்னேறுவார்கள்!


T Jayakumar
ஜூன் 14, 2025 19:59

திருட்டு திராவிடத்தின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது


J.Isaac
ஜூன் 14, 2025 18:30

ஒவ்வொரு பெற்றோர்களும் எத்தனை லட்சம் செலவழிக்கிறார்கள் ? பாமர ஏழை மக்கள் செலவழிக்க முடியுமா?


என்றும் இந்தியன்
ஜூன் 14, 2025 18:08

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யய்யே உளறும் பொய்யிலேயே வளரும் திருட்டு திராவிட உளறல் மடியல் அரசின் பொய் சொல்வதில் நோபல் பரிசுக்கு வால் வால் தூ கள்


lana
ஜூன் 14, 2025 17:43

இதே கேள்வியை பப்பு பப்பி மா க்கு கேட்பார்கள் ஆ. அண்ணாமலை மக்களின் தலைவர்


Barakat Ali
ஜூன் 14, 2025 17:31

திமுகவின் சாயம் எப்போதோ வெளுத்துவிட்டது ......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை