உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக பின்னிய சதிவலையை வென்றோம்: இபிஎஸ் சாடல்

திமுக பின்னிய சதிவலையை வென்றோம்: இபிஎஸ் சாடல்

சென்னை: எழுச்சி பயணத்தில் என்னுடைய கருத்துக்கள் மக்களிடையே சென்றுவிடக்கூடாது என திமுக பின்னிய சதிவலைகளை வென்றோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:சிவகங்கை மாவட்டத்தில் தொடங்கி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் என தென் தமிழக மாவட்டங்களின் மக்கள் அளித்த அன்பு மழையில் நனைந்தது மகிழ்ச்சியளிக்கிறது.அதன் முத்தாய்ப்பாக, சிவகாசி தொகுதியின் பட்டாசான வரவேற்பையும், தமிழகத்தின் மாபெரும் அரசியல் புரட்சியாக அதிமுக முதல் முறையாக மக்களுக்கான ஆட்சியை அமைத்த போது, எம்ஜிஆரை சட்டமன்றத்திற்கு பெருமையோடு அனுப்பி வைத்த அருப்புக்கோட்டை தொகுதி மக்கள், அதே பெருமையோடும், மாறா அன்போடும், இந்த இயக்கத்தின் மீதான பற்றோடும் எனக்கு அளித்த வரவேற்பையும் மகிழ்வோடு பெற்றேன்.என்னுடைய இந்த பயணத்தின் கருத்துக்கள் மக்களிடையே சென்றுவிடக் கூடாது என்பதற்காக திமுக பின்னிய பல்வேறு மடைமாற்று சதிவலைகளை வென்று, பை பை ஸ்டாலின் என்ற முழக்கம் விண்ணை எட்டும் அளவிற்கு எழுச்சிப்பயணத்தை வெற்றிப்பயணமாக்கிய தென்னகத்து மக்களை வணங்கி , எழுச்சிப்பயணத்தின் இரண்டாம் கட்டத்தை நிறைவு செய்து, இன்று மூன்றாம் கட்ட எழுச்சி பயணத்தை தமிழகத்தின் வட மேற்கு எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து துவங்குகிறேன்.தமிழக மக்களின் ஆசியோடு, மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். செல்லுமிடமெல்லாம் அன்பை வாரி வழங்கிய மக்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக, அஇஅதிமுக-வின் நல்லாட்சி இருக்கும்.இவ்வாறு இபிஎஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

M Ramachandran
ஆக 11, 2025 22:23

பழனியின் துரோக புத்திக்கு ஆ தி மு கா விரைவில் பஞ்சராகி 15 சீட்டு வருவதெ அதிகம். ஸ் டாலினும் அந்த தைரியத்தில் தான் இப்போ வெளியில் வருகிறார்.


S.L.Narasimman
ஆக 11, 2025 19:44

தென்மாவட்டங்களில் எடப்பாடியாருக்கு அதிமுக மக்கள் தங்களது உணர்வுபூரணமான வரவேற்பையும் ஆதரவும் கொடுத்தது எல்லா பொய்யர்களின் கூற்றை உடைத்து சுக்கு நூறாக்கியுள்ளது.


mathavan
ஆக 11, 2025 19:19

காசு குடுத்துத் கூட்டம் கூடி உங்களுக்கு ஒப்பாரிவைச்சு என்ன பயன், ஒட்டு உங்களுக்கு கிடைக்காது


mathavan
ஆக 11, 2025 19:17

உனக்கு உங்க சாதிஒட்டுகூட கிடைக்காது, அண்ணாமலையை ஓரம்கட்டுனது உங்க சாதிய இருக்கிற பலருக்கு பிடிக்கமாப்போனது மறந்துடுச்சா ? நீங்க இனிமேலு சசிகலா காலை பிடிக்கக்கூட முடியாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை