உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னைக்கு தீர்வுக்கு ஒரே வழி; ஐநா சொல்வது இதுதான்!

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னைக்கு தீர்வுக்கு ஒரே வழி; ஐநா சொல்வது இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையிலான பல ஆண்டு கால மோதலை தீர்ப்பதற்கு ஒரே வழி இரு நாடுகள் தான் தீர்வு மட்டுமே சாத்தியமாக இருக்கும் என ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்தார்.இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர நடந்த பேச்சு அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்த சூழலில், பாலஸ்தீனத்தை இறையாண்மை கொண்ட நாடாக முறையாக அங்கீகரிப்பதாக கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளித்த ஆஸி, கனடா, பிரிட்டன் நாடுகளுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர், ''பாலஸ்தீன நாடு இருக்காது. எங்கள் நிலத்தின் மையப்பகுதியில் ஒரு பயங்கரவாத அரசை எங்கள் மீது திணிக்கும் முயற்சிகளுக்கு பதிலடி கொடுக்கப்படும்'' என திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.இது குறித்து ஐநா தலைமையகத்தில் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் பேசியதாவது: பாலஸ்தீனத்திற்கு அரசு அந்தஸ்து என்பது ஒரு உரிமை. வெகுமதி அல்ல. அரசு அந்தஸ்தை மறுப்பது எல்லா இடங்களிலும் உள்ள பயங்கரவாதிகளுக்கு ஒரு பரிசாக இருக்கும். இரண்டு அரசுகள் இல்லாமல் மத்திய கிழக்கில் அமைதி இருக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

ஒரே வழி என்ன?

ஐநா தலைமையகத்தில் ஆங்கில செய்தி சேனலுக்கு, ஐநா செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறுகையில், ''இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையில் தற்போது நாம் காணும் சவால்களுக்கு இரு நாடுகள் தான் தீர்வு. இருநாடுகள் தீர்வு கூட்டம் பொதுச்சபைக்கு மிகவும் முக்கியமானது'' என்றார்.

அடுத்தது என்ன?

பாலஸ்தீனத்தை ஐ.நா.,வின் 193 உறுப்பு நாடுகளில், இந்தியா உட்பட 140க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன. அதே நேரத்தில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இவர்களின் நட்பு நாடுகள் உட்பட குறைந்தது 45 நாடுகள் அங்கீகரிக்கவில்லை. பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக தெரிவித்துள்ள நாடுகளில் பெரும்பாலானவை, ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் அது இருக்கக் கூடாது என்று கூறியுள்ளன. ஆனால், இதை ஹமாஸ் ஏற்கவில்லை. 'அங்கீகாரம் என்பது அரசியல் மற்றும் சட்டப்பூர்வ உரிமைக்கும் இடைப்பட்டதாகும். அங்கீகாரம் அளிப்பதாலேயே, ஒரு குறிப்பிட்ட பகுதி தனி நாடாக முடியாது ' என, நிபுணர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kalyan Singapore
செப் 23, 2025 12:17

இரு நாடுகள் போர்முலா ஓரளவு இயங்கத்தொடங்கிய பொது பலஸ்தீன் நாடு ஹமாஸ் என்று மற்றவர்கள் கூறினாலும் அதற்கு ஆதரவு அளித்தது பலஸ்தின் நாடு தானே? 5000 ஏவு கணைகள் கொண்டு இஸ்ரேலை தாக்கி அவர்கள் மக்களைக்கொன்று பெண்களை கற்பழித்து பிணைக்கைதிகளையும் பிடித்துச்சென்றது . இதை கொண்டாடியவர்கள் ஹமாஸ் மட்டுமல்ல பலஸ்தீன் நாட்டின் பல மக்களும் கூட வெற்றி ஊர்வலங்கள் இன்றும் இணை தளங்களில் உள்ளன அதிலிருந்தே இரு நாடு என்ற கருத்துக்கு இஸ்ரேல் நாட்டுக்கு நம்பிக்கை போய் விட்டது. இன்னும் எல்லா பிணைக்கைதிகளையும் ஹமாஸ் விடுதலை செய்யவில்லை . உலக நாடுகள் பலஸ்தீனுக்கு கொடுத்த உதவிகள் யாவும் ஆயுதங்கள் வாங்கவும் எகிப்துக்கு சுரங்க வழிப்பாதை அமைக்கவும் ஹமாஸ் செலவிட்டது. பாதுகாப்பு, ராணுவம் இவை இரண்டையும் இஸ்ரேலிடம் ஒப்படைத்து ஹமாஸும் துடைத்தெறியப்பட்டால் இரு நாடுகள் போர்முலா ஒருவேளை இஸ்ரேலால் ஒப்புக்கொள்ளப்படலாம்


karthik
செப் 23, 2025 09:10

எந்த ஒரு தீவிரவாத அமைப்புகளின் கைகளில் ஒரு நாடு செல்லக்கூடாது... பாரதம் இது போன்ற தீவிரவாத ஆட்சியை பல ஆண்டுகள் அனுபவித்த வரலாறு உண்டு


SP
செப் 23, 2025 09:00

முதலில் ஹமாஸ் தீவிரவாதிகளை கண்டித்து ஒரு மனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுங்கள் பாலஸ்தீனம் உருவாக வேண்டும் என்றால் ஹமாஸ் தீவிரவாதிகள் ஆயுதத்தை கீழே வைக்க வேண்டும் என்று கண்டிப்பு காட்டுங்கள்.


VENKATASUBRAMANIAN
செப் 23, 2025 08:08

என்ன பிரகாஷ் ராஜ் அமீர் சத்யராஜ் வெற்றி மாறன் புரிந்ததா. அடிப்படை அறிவு இல்லாமல் பேசாதீர்கள்