| ADDED : டிச 02, 2025 09:40 AM
சென்னை: சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூர் 260 மி.மீ., மழைப்பதிவாகி உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை நகரின் பல பகுதிகளில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்கிறது. தாழ்வான பகுதிகள் மற்றும் சுரங்கப்பாதையில் சூழ்ந்துள்ள மழை நீர், சாலைகளில் விழுந்த மரங்களை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அகற்றி வருகின்றனர். சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழை நீர் இரவோடு இரவாக அகற்றப்பட்டது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 8:30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில்எண்ணூர்- 260பாரிஸ்- 254 ஐஸ் ஹவுஸ்- 224 மணலி புதுநகரம்- 206 பொன்னேரி- 206 பேசின் பிரிட்ஜ்- 197 மணலி- 183வடபழனி- 182மேடவாக்கம்- 177 கும்மிடிப்பூண்டி- 169 தொண்டையார்பேட்டை- 166 கத்திவாக்கம்- 165நுங்கம்பாக்கம்- 161சாலிகிராமம்- 160சைதாப்பேட்டை- 156துரைப்பாக்கம்- 156பெரம்பூர்- 150 அமிஞ்சிக்கரை- 150 சோழவரம்- 140 நாராயணபுரம்- 139 அடையார்- 138 காசிமேடு- 133 வேளச்சேரி- 127 வளசரவாக்கம்- 121 மாதவரம்- 120 புழல்- 119 நெற்குன்றம்- 118ராஜா அண்ணாமலைபுரம்- 117 கொரட்டூர்- 116சோழிங்கநல்லூர்- 109 மடிப்பாக்கம்- 107கண்ணகி நகர்- 105மெட்ரோ சேவை
சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகரை நோக்கி வந்த மெட்ரோ ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் பழுதாகி சென்ட்ரல் அருகே நின்றது. தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் தற்போது மெட்ரோ ரயில் சேவை சீரானது.