முதல்வருக்கு ஷாக் கொடுத்த இளைஞர்; குண்டுக்கட்டாக அகற்றம் | Siddaramaiah | Karnataka CM | Security
பெங்களூருவில் உள்ள சட்டசபை வளாகம் அருகே ஜனநாயக தினம் குறித்த நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. மேடையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் அமைச்சர்கள் இருந்தனர். அப்போது சித்தராமையாவை நோக்கி ஓடிவந்த இளைஞர் ஒருவர் போலீசாரின் பாதுகாப்பையும் மீறி ஜம்ப் செய்து மேடையில் ஏறினார். இதை கவனித்த முதல்வரின் தனி பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்து குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர். அந்த இளைஞர், கையில் இருந்த சால்வையை சித்தராமையாவை நோக்கி வீசி சென்றார். முதல்கட்ட தகவலின் படி , அவர் சித்தராமையாவை பாராட்டும் நோக்கில் சால்வை அணிவிக்க வந்ததாக கூறப்படுகிறது. அவரது பெயர் குறித்த விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.