தார்சலாம் ஸ்ரீ சிவ பாலசுப்பிரமணியர் கோயிலில் கார்த்திகை தீப அபிஷேகம்
தார்சலாம் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவ பாலசுப்பிரமணியர் திருக்கோயிலின் கார்த்திகை தீப அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. 03.12.2025 மாலை அர்ச்சகர்கள் கணேசன் பிச்சுமணி, சீனிவாசன், கிருஷ்ணன் விசேஷ பூஜை நடத்தினர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு 1008 தீப விளக்கினை ஏற்றி முருகப்பெருமானை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். மகா பிரசாதத்துடன் இனிதே நிறைவுற்றது. விழா குழு உறுப்பினர்களான பாலசுப்பிரமணியன். V.ஜெயபிரகாஷ் ஜெயராஜ், வாசு துருவ நாராயணன், கிருஷ்ணன், ராமநாதன் விழா ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்ிருந்தனர். - தான்சானியவிலிருந்து நமது செய்தியாளர் தானேஷ் ராஜா