உள்ளூர் செய்திகள்

குவைத்தில் தொழிலாளர் குறைதீர்க்கும் முகாம்

குவைத் : குவைத் இந்திய தூதரகத்தில் தூதர் ஆதர்ஷ் ஸ்வைக்கா தலைமையில் தொழிலாளர் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இந்த முகாமில் தொழிலாளர்கள் தங்களுக்கு முறையாகசம்பளம் வழங்காதது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள்தொடர்பாக புகார் தெரிவித்தனர்.ஒவ்வொருவரின் புகாரின் அடிப்படையில் தூதரக அதிகாரிகள் தேவையான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர்கள் பலர் பங்கேற்று பயனடைந்தனர்.--- குவைத்தில் இருந்து நமது தினமலர் செய்தியாளர் காஹிலா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்