sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஜூலை 02, 2023 09:20 AM

Google News

ADDED : ஜூலை 02, 2023 09:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பி.கண்மணி, மாதவரம், சென்னை.

*பெற்றோருக்கு பாதபூஜை செய்தால் பலனுண்டா?

பலன் உண்டு. பாவம் போகும். புண்ணியம் சேரும். தர்மத்தின் மீது பிடிப்பு உண்டாகும்.

எம்.மனோகரி, கூடக்கோவில், மதுரை.

*மனைவியுடன் இருக்கும் குபேரரை எங்கு தரிசிக்கலாம்?

பெரம்பலுார் மாவட்டம் ஆலத்துார் செட்டிக்குளம் மலை மீதுள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் மனைவி சித்ரலேகாவுடன் குபேரர் இருக்கிறார்.

கே.நாகராஜன், அஞ்சுகிராமம், கன்னியாகுமரி.

*கார்த்திகை சோமவாரத்தில் (திங்கள்) சிவதீட்சை பெறலாமா?

கார்த்திகை சோமவாரத்தில் சிவதீட்சை பெறலாம்.

எம்.கிரிஜா, வடமணிப்பாக்கம், செங்கல்பட்டு.

*வீட்டிலுள்ள சுவாமி சிலைக்கு தினமும் அபிஷேகம் செய்யணுமா...

கற்சிலைக்கு தினமும் அபிஷேகம் செய்ய வேண்டும். உலோகச் சிலைக்கு செவ்வாய், வெள்ளி, பவுர்ணமி நாளில் அபிஷேகம் செய்தால் போதும்.

கே.அபிநயா, நியூபாகலுார், பெங்களூரு.

*மல்லிகைப்பூவால் பைரவருக்கு அர்ச்சனை செய்யலாமா?

மல்லிகை, முல்லை உள்பட வாசனை பூக்களால் அர்ச்சனை செய்யலாம்.

சி.ராமையா, பணகுடி, திருநெல்வேலி.

*பறவை, விலங்குகளுக்கு பாவ, புண்ணியம் உண்டா?

பாவம் கிடையாது. புண்ணியம் உண்டு. அவை அறியாமையால் செய்த செயலையும் வழிபாடாக கடவுள் ஏற்கிறார். உதாரணமாக வில்வ இலைகளை சிவலிங்கத்தின் மீது போட்ட குரங்கு மறுபிறவியில் முசுகுந்த சக்கரவர்த்தியாக பிறந்தது.

எல்.கந்தவேல், ஜவ்வாதுப்பட்டி, திண்டுக்கல்.

*பசுவின் கழுத்தில் மணி கட்டுவது ஏன்?

மணி ஓசை கேட்டதும் தெய்வமாக கருதி பசுவை வணங்குவதற்காக மணி கட்டுகின்றனர்.

கே.ராஜஷே், திருப்பனாம்பாக்கம், கடலுார்.

*மனிதனிடம் நேர்மை குறையக் காரணம் என்ன?

பணம், புகழ், அதிகாரத்திற்காக மனிதன் நேர்மை தவறி நடக்கிறான்.

வி.ரமா, ரஜோரி கார்டன், டில்லி.

*ராகு காலத்தில் குழந்தை பிறந்தால் பரிகாரம் செய்யணுமா?

ராகு காலத்தில் பிறந்தால் தோஷம் வராது. அதனால் பரிகாரம் செய்ய வேண்டாம்.

எம்.முருகன், மதுக்கரை, கோயம்புத்துார்.

*மனதைக் கட்டுப்படுத்த என்ன வழி?

எந்த இடத்தில் தவறு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தால் மனம் விழிப்படையும். தியானம் செய்யுங்கள். மனம் கட்டுப்படும்.






      Dinamalar
      Follow us