sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்!

/

மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்!

மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்!

மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்!


ADDED : மே 06, 2013 02:07 PM

Google News

ADDED : மே 06, 2013 02:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நாம் செலுத்தும் பணிவுக்கும், மரியாதைக்கும் பிரதிபலனாக கடவுள் ஏதாவது நன்மை தர வேண்டும் என்று எதிர் பார்க்கும்வரை உண்மையான பக்தி ஏற்படாது.

* கடைநிலையில் வாழும் மனிதனுக்கும் உணவு கிடைக்கவேண்டும். பசித்தவனுக்கு உணவுஅளிப்பது தான் என்னுடைய ஆன்மிகம். அதை தவிர மற்றதெல்லாம் பொய்யே.

* அரசியல், சமுதாயத்தில் சுதந்திரத்தை நாம் பெற்றிருக்கலாம். ஆனால், ஆத்திரம், ஆசைஇவற்றுக்கு அடிமையாக இருக்கும் வரை சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடியாது.

* நீங்கள் உலகில் பிறந்திருப்பது வெல்வதற்காகவே. வெறும் கோழைத்தனத்தால் யாருக்கும் பணிந்து போவதற்கு அல்ல. நீங்கள் ஒரு சபையில் இருந்தால், உங்களுக்கு எல்லாரும் மரியாதை செய்யக்கூடிய அளவுக்கு நடந்து கொள்ள வேண்டும்.

* நம்முடைய வழிபாட்டில் கடவுளை நம் தாய் தந்தையராக ஒப்புக்கொள்கிறோம். ஆனால். அன்றாட வாழ்விலோ நாம் சந்திக்கும் அனைவரையும் எதிரிகளாக நினைக்கிறோம்.

* அந்தக்காலத்தில் கடவுளை நம்ப மறுப்பதே நாத்திகம். இப்போதோ தன்னை நம்ப மறுப்பவனே நாத்திகவாதி. தன்னம்பிக்கையோடு இருப்பதே உண்மையான ஆத்திகம்.

* அன்பு காட்டுவதே செயல்களில் எல்லாம் சிறந்த செயல். அன்பே மேலானது. தலைசிறந்த ஞானமும் அதுவே.

* உள்ளங்களை திறந்து வையுங்கள். பிரபஞ்சத்தில் உள்ள நல்ல எண்ணங்கள் அனைத்தும் நம்மை வந்து சேரட்டும்.

* நேர்மையான கோபம் என்று ஒன்று கிடையாது. பேராசையே கோபத்திற்கு அடிப்படைக் காரணம். அன்பு நெஞ்சத்தில் கோபத்திற்கு இடமே இருப்பதில்லை.

* அடக்கப்படாத மனம் மனிதனை எப்போதும் கீழ்நோக்கியே இழுத்துச் சென்று பாதாளத்தில் ஒருவனைத் தள்ளிவிடும்.

* வேடதாரியாகப் பொய் சொல்லி வாழ்வதை விட, உண்மை எங்கு இழுத்துச் சென்றாலும் தப்பில்லை என்று வாழ்வதே உயர்ந்தபண்பாகும்.

* முதலில் பணியாளனாக வேலை செய்யக் கற்றுக் கொள். எஜமானராக வாழும் தகுதி தானாக உன்னைத் தேடி வரும்.

* நன்மை விளையும் என்று உணர்ந்தால் மட்டுமே, மனதில் உள்ள அந்தரங்க விஷயங்களைப் பிறரிடம் சொல்லலாம்.

* மனதை அடக்கப் பழகியவன் வேறு எதற்கும் எளிதில் வசப்பட மாட்டான். அத்தகையவன் சிறந்த அறிவாளியாகவும் திகழ்வான்.

* இந்த உலகம் பெரிய உடற்பயிற்சி சாலை. நாம் அனைவரும் வலிமையுள்ளவர்களாக்கிக் கொள்ளவே இங்கு வந்திருக்கிறோம்.

* யாரிடமும் பொறாமை கொள்ளாதீர்கள். நன்மை செய்வோர் அனைவருக்கும் கைகொடுக்கத் தயங்காதீர்கள்.

உற்சாகப்படுகிறார் விவேகானந்தர்






      Dinamalar
      Follow us